......................................................
பால் பொருட்கள் தயாரித்து தொழில் செய்வது எப்படி?
திருச்சியில் வரும் 25 ம் தேதி பயிற்சி தொடக்கம்
திருச்சி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்து தொழில் செய்வது எப்படி? என்பது குறித்து பயிற்சி வரும் 25 ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற நிதியுதவியுடன் திருச்சி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ' மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு ' குறித்த இலவச செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி வரும் 25 ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் நறுமண பால், கோவா, கோவா பொருட்கள், பனீர், நொதிக்கப்பட்ட பால் பொருட்கள் மற்றும் பால் பானங்கள் தயாரிப்பு பற்றி பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.
சுயதொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 0431 _ 2331715 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தலைவர் ரிச்சர்டு ஜெகதீசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பயிற்சி முடித்த அனைவருக்கும் சான்றிதழ், கையேடு வழங்கப்படும்.
Latest News
மற்றவர்களுக்கு சுதாங்கன்....
கண்கள் தானம் அளித்து உறுதி..
துறையூரில் நாளை செப்.5 ..
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..
Events Near You
இலவச - Musiri
விகாஸ் - Thuraiyur
அவேர்னெஸ் - Musiri
81 வது - Musiri
சற்குரு - Thuraiyur
சாய் - Musiri
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy